தஞ்சாவூர், ஜூன் 10-
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் 13, 20, 26 ஆகிய தேதி களில், மாற்றுத் திறனாளி களுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் தீபக்ஜேக்கப் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக் கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படு கின்றன.
இதுவரை மாற்றுத் திற னாளிகளுக்கான அடை யாள அட்டை பெறாதவர் களுக்காக தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதி, கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே யுள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் ஜூன் 20 ஆம் தேதி, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலுள்ள கிராம சேவை கட்டடத்தில் ஜூன் 27 ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்து வர், கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி களைப் பரி சோதனை செய்து, மருத்துவச் சான்று வழங்கவுள்ளனர்.
இச்சான்றிதழின் அடிப்ப டையில் மாற்றுத் திறனாளி களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இது வரை அடையாள அட்டை பெறாத, மாற்றுத் திறனாளி கள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஆறு புகைப்படங்களுடன் இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.