திருவாரூர், மே 20-
திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர வர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மே23 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்துப் பூர்வ மாக அளித்திட வேண்டும். மேலும் கூட்டத்திற்கு வருபவர்கள் தங்களது இருப்பிட முகவரிக்கான குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாளஅட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டு வரவேண்டும்.
இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயனடையுமாறு தி.சாருஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.