புதுக்கோட்டை, ஜூன் 21-
சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார் களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளின் நிலத்தடி நீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவ சாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 150 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.22.50 லட்சத்திற்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
நிலத்தடிநீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்திட ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயி கள் பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பு பவர்கள், புதிய ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்து புதிய மின் மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் 4 ஸ்டார் குறியீடுள்ள மோட்டார் வாங்கிட ஆதார், சிட்டா, அடங்கல், புல வரைபடம், சிறு குறு விவசாயி களுக்கான சான்று ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் (வே.பொ), திருச்சி மெயின் ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, கைபேசி எண்-99944 05285 என்ற அலுவலகத்தையும், உதவி செயற்பொறி யாளர் (வே.பொ), நைனா முகமது கல்லூரி அருகில், இராஜேந்திர புரம், அறந்தாங்கி-கைபேசி எண் 91593 84364 என்ற அலுவல கத்தையும், செயற்பொறியாளர் (வே.பொ), திருச்சி மெயின்ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, தொலைபேசி எண்-04322-221816 என்ற அலுவலகத்தையும் அணுகி பயன்பெறலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.