districts

img

மருத்துவமனை கட்டிடப் பணிக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

அறந்தாங்கி, ஜூன் 20-

     புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை யில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள அவசரகால விபத்து பகுதி கட்டிடப்  பணிக்கும், அறந்தாங்கி அறிஞர் அண்ணா  அரசு மருத்துவமனையில் ரூ.46 கோடி யில் கட்டப்படவுள்ள மாவட்ட தலைமை  மருத்துவமனை கட்டிட பணிக்கும், மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  அடிக்கல் நாட்டினர். பின்பு, தாய்மார் களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினர்.  

     இந்நிகழ்ச்சியில் மேலவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, இராமநாதபுரம் நாடா ளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, அறந்  தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா மற்றும் மருத்துவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.