districts

நான்கு வழிச்சாலைக்காக நிலங்கள், வீடுகளை இழந்த ஏழைகளுக்கு உரிய இழப்பீடு தராமல் பணி செய்வதா? ஏப்.13 சாலைப் பணிகளை தடுத்தி நிறுத்தி போராட்டம்

மயிலாடுதுறை, ஏப்.3 - மயிலாடுதுறை மாவட் டம் ஆக்கூரில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், நான்கு வழிச் சாலை நில எடுப்பில் பாதிக்கப் பட்ட நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய அவசர ஆலோ சனைக் கூட்டம் ஞாயிறன்று விவசாயி மாமாக்குடி ஆனந் தன் தலைமையில் நடைபெற் றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் எஸ்.துரைராஜ், மாவட்டத்  தலைவர் டி.சிம்சன், மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன், ஏ.ஆர்.விஜய், ஸ்ரீதர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வீ.எம். சரவணன், கண்ணகி உள்ளிட் டோர் உரையாற்றினர். அந்த உரையில், கடந்த  2021 டிசம்பர் 21 முதல்  29 வரை சிங்கனோடை யில் உள்ள நெடுஞ்சாலைத் துறை, ஒப்பந்த நிறுவன மான வில்ஸ்பன் அலுவல கத்திற்கு முன்பு நடை பெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தின் முடிவில், 29.12.2021 அன்று திருக்கடை யூரில் எடுத்த முடிவுகள் இது வரை செயலாக்கம் பெற வில்லை. மாறாக சாலை வேலைகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. நில உரிமையாளர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் மேல் முறையீட்டு மனு மீதான விசா ரணை முடிந்த ஊர்களுக்கு,  இன்று வரை பணம் பட்டு வாடா செய்யப்படவில்லை. மேலும் பல ஊர்களுக்கு மேல்  முறையீடு விசாரணை செய்யப் படவில்லை. அதைவிட, மாவட்ட ஆட்சியரின் மேல் முறையீட்டு நிவாரண ஆணையை எதிர்த்து நெடுஞ் சாலைத்துறையினர் நீதி மன்றம் சென்றுள்ளனர். மேற்கண்ட சூழ்நிலை யில், ஒரு இறுதி முடிவு எட்டப் படும் வரை நெடுஞ்சாலைத் துறை பணிகளை தடுத்து  நிறுத்துவது என்றும், 13.4. 2022 அன்று பணிகள் நடைபெ றும் இடங்களில் ஆங்காங்கே  முற்றுகை போராட்டம் நடத்து வது என்றும் முடிவு செய்யப் பட்டது. உரிய தீர்வு கிடைக் காதவரை போராட்டங்கள் ஓயப் போவதில்லை என அறி வித்துள்ளனர்.