districts

img

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி இழப்பீடு வழங்குக! விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, அக்.19 - 2021 - 2022 ஆண்டிற்கு  பயிர் காப்பீடு செய்த  அனைத்து விவசாயிகளுக் கும் பாரபட்சமின்றி இழப்பீடு  வழங்க வேண்டுமென வலி யுறுத்தி மயிலாடுதுறை, திருக்கடையூர், சீர்காழி பகுதிகளில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் பயிர் காப்பீடு இழப்பீடு கேட்டு புதனன்று ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அ.ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், சி.மேகநாதன், ஜி.வைரவன், எஸ்.கருணா நிதி ஆகியோர் உரையாற்றி னர். தரங்கம்பாடி, செம்பனார் கோவில் ஒன்றியங்கள் சார்பில் திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தரங்கம்பாடி ஒன்றிய  செயலாளர் என்.சந்திரமோ கன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் டி.சிம்சன், மாவட்ட துணைத்தலைவர் குணசுந்தரி, எம்.கணேசன், தெட்சிணாமூர்த்தி ஆகி யோர் உரையாற்றினர். சீர்காழி பழைய பேருந்து  நிலையத்திற்கு அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட பொருளாளர் எம்.செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.இளங்கோ வன், ஒன்றிய தலைவர் எஸ். ஞானபிரகாசம் ஆகியோர் உரையாற்றினர்.

;