districts

img

தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, டிச.30 - 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரை அடிப் படையில் அனைத்து ஊராட்சிகளும் ஊதியம்  வழங்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத்  தொகையை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அரசு உத்தரவு அடிப்படையில் 31 சதவீத அக விலைப்படி வழங்க வேண்டும். தூய்மை பணி யாளர்களுக்கு வழங்கியது போல், தற்போது  பணியில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கும் ரூ.2000 பென்சன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணிக் கொடை வழங்க வேண்டும்.  பணியில் உள்ள அனைத்து ஊராட்சி ஊழி யர்களுக்கும் உடனடியாக பணி பதிவேட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். மாதம் ரூ.600-க்கு வேலை வாங்கும் உள்ளாட்சி நிர்வாகத்தின் கொத்தடிமை முறையை ரத்து செய்து, அவர்களுக்கு முறையான பணி நியமனமும், உரிய சம்பளமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐ டியு) சார்பில் வெள்ளிக்கிழமை மணப்பாறை  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கை  விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றியத் தலை வர் பழனியாண்டி, ஒன்றிய துணைத்தலை வர் அம்மாசி ஆகியோர் தலைமை வகித்த னர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புற நகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், ஒன்றி யச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஆட்டோ சங்க  மாவட்டத் தலைவர் நவமணி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் புஷ்ப ராஜ் ஆகியோர் பேசினர்.