திருச்சிராப்பள்ளி, நவ.30- சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வலி யுறுத்தி திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறையூர் ஒன்றி யச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி யன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் காசிராஜன், சங்கிலி துரை, குமார், பாக்யராஜ், கமலம், ரவி, கணேசன் உள் பட 700க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில், துறை யூர் ஒன்றியத்தில் சொந்த வீடு இல்லாத அனைவருக் கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், 60 வயது முடிந்த முதியோருக்கு உதவி தொகை வழங்க வேண்டும், துறையூர் நகரில் காவேரி குடிநீர் தினமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.