கரூர், ஜன.29 - சென்னையில் நடக்கும் போராட்டத்தை ஆதரித்து கரூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி யில் அறிவித்தவாறு சத்துணவு ஊழியர் களை முழு நேர அரசு ஊழியராக்கி கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஓய்வு பெறுகிற நாளில் ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை ஒரு மாணவருக்கு ரூபாய் ஐந்தாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாநில நிர்வாகிகள் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.மல்லிகா வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் உட்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மாவட்ட இணைச் செயலாளர் ஜெ.ஜெயமேரி நன்றி கூறினார்.