கோவை, அக்.21- ஆழியார் கவியருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் நீராட வனத்துறையினர் தடை விதித்துள்ள னர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வரு கிறது. இந்நிலையில், ஞாயிறன்று நள்ளி ரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக ளில் கனமழை பெய்தது. இதனால், ஆழி யார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள் ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணி கள் அருவியில் குளிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவிக்கு வரும் நீரின் அளவு சீரான பின்பு அருவியில் சுற்று லாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என வனத் துறையினர் தெரி வித்து உள்ளனர். ஆழியார் சோதனை சாவடி அருகே கவியருவியில் குளிக்க வரும் சுற்று லாப் பயணிகள் காற்றாற்று வெள்ளம் காரண மாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.