மயிலாடுதுறை, ஆக.20 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள சந்திரப்பாடி கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தை தமிழ்நாடு முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து, விழா பேருரையாற்றினார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமே கலை தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உரை யாற்றுகையில், “இந்த மீன்பிடி ஏலக்கூடம் ரூ.66 லட்சம் மதிப்பீட்டிலும், வலைபின்னும் கூடம் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், படகணை யும் தளம் ரூ. 5 கோடி மதிப்பீட்டிலும் கட்டப் பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். 7 இடங்களில் உயர்மின் விளக்குகள் வேண்டுமென்ற கோரிக்கை நிறைவேற்றப் பட்டு, அது புதுப்பட்டினத்தில் பழையாறு, திருமுல்லைவாசலில் தொடுவாய், பெருந் தோட்டத்தில் நாயக்கன்குளம் ஆகிய இடங்க ளில் அமைக்கப்பட்டுள்ளன. கபடிக்கான உள்அரங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாத லால் கடல் மட்டம் உயர்வதை தடுப்பதற்கு தடுப் பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பல திட்டங்களை மக்களுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார். சந்திரபாடி ஊராட்சிமன்றத் தலைவர் பிர மிளா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் மற்றும் மீனவ பஞ்சாயத் தார்கள், பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப் பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.