districts

img

சரவெடிக்கான தடையை நீக்கக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்

வெம்பக்கோட்டை, பிப்.24- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் சுமார் 250 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சரவெடி தயாரிப்பதற்கான தடையை நீக்க வேண்டும், பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) பயன்படுத்துவதற்கான தடை உடனே நீக்க  வேண்டும், சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு நிரந்தரமாக விதிவிலக்கு வழங்க வேண்டும் என மோடி தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்தி கடந்த நான்கு  நாட்களாக ஆலை உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தநிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசுத் தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற  போராட்டத்தில் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்க (சிஐடியு) நிர்வாகிகள் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா உட்பட பலர் பங்கேற்றனர்.