புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விஷ்ணுகுமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது தந்தையிடம் தீருதவித் தொகை ரூ.6 லட்சத்திற்கான காசோலையை, தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் செவ்வாய்க்கிழமை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.