தஞ்சாவூர், ஆக.2-
பட்டுக்கோட்டை வட்டாரப் பகுதியில், தற்போது சம்பா நெல் நாற்றங்கால் விடு தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன.
சம்பா பருவத்தில் விவசாயிகள் அதிக மாக மகசூல் பெற்று பயன்பெறும் வகை யில், நாற்றங்கால் பருவத்தில் உர நிர்வா கம் பற்றி பட்டுக்கோட்டை வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் சா.மாலதி தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒரு ஏக்கர் நடவு செய்வ தற்கு தேவையான 8 செண்டு நாற்றங்கா லுக்கு, நாற்றங்கால் தயாரிப்புக்கு முன் 400 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தை இடுதல் வேண்டும்.
8 செண்டு நாற்றங்கா லுக்கு அடியுரமாக 800 கிராம் துத்தநாக சல்பேட்டை இடுதல் வேண்டும். நாற்றுப் பறிக்க, விதைத்ததிலிருந்து 25 நாட்களுக்கு மேல் ஆகுமெனில், நாற்று பறிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் 16 கிலோ டிஏபி உரத்தை இடுதல் வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மண் ணில் விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குள் நாற்று பறிப்பதாக இருந்தால், 16 கிலோ டிஏபி அல்லது 6 கிலோ யூரியா மற்றும் 48 கிலோ சூப்பர் பாஸ்பேட் இடுதல் வேண்டும். நாற்றுப் பறிக்கும் போது வேர் அறுபடுவதை தடுக்க விதைத்த பத்து நாள் கழித்து 8 செண்டு நாற்றங்காலுக்கு 32 கிலோ ஜிப்சம் மற்றும் 8 கிலோ டிஏபி உரத்தை இடுதல் வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை பின் பற்றி விவசாயிகள் அதிகமாக மகசூல் பெற்று பயனடையலாம்” என தெரிவிக் கப்பட்டுள்ளது.