தஞ்சாவூர், அக்.31 - பூதலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக் காக பல நாட்களாக காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.93 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, பூத லூர், வல்லம், ஆலக்குடி, அம்மாப் பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதி களில் அறுவடைப் பணிகள் நடந்து வரு கின்றன. இருப்பினும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் ஈரமான நிலையில் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் சில தினங் களே உள்ள நிலையில், அறுவடைப் பணிகளை முடித்து கொள்முதல் நிலை யங்களில் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் முனைப்பு காட்டி வரு கின்றனர். இந்நிலையில் பூதலூர், அம்மாப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், குறை வான அளவிலேயே நேரடி நெல்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்மணிகள் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகமாவதாக வும், செலவு அதிகரிப்பதாகவும் விவசா யிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கூடுதல் நெல் கொள்முதல் நிலையங் களை திறக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. இதில், நேரடி நெல்கொள் முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பல்வேறு காரணங்களால் விவசாயிகள், தனி யார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்தனர். ஆனால், சில விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய வேண்டு மென கொண்டு வந்து, பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப் பாக பூதலூர் பகுதியில் ஒரு கொள் முதல் நிலையம் மட்டுமே செயல்படு கிறது. இருப்பினும், பூதலூர், கோவில்பத்து, சஞ்சீவிபுரம் உள்ளிட்ட சுமார் ஆயிரக் கணக்கான ஏக்கரில் அறுவடை செய்யப் பட்ட நெல் மணிகள் கொள்முதல் செய்யப் படாமல் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, கூடுதலாக ஒரு கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தற் போது மழை பெய்து வருவதால், விவ சாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள னர். மாவட்டத்தின் பல்வேறு இடங்க ளில் போதிய அளவு கொள்முதல் நிலை யங்களை திறக்க வேண்டும்” என்றார்.