அறந்தாங்கி, ஜன.12 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் புகையான், யானைகொம்பன், பூஞ்சை காளான் உள்ளிட்ட நோய்களினால் பயிர்கள் முழுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உடனடியாக அதற்கு நிவார ணம் வழங்க கோரியும், தமிழக அரசு பாகுபா டின்றி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இன்சூ ரன்ஸ் நிறுவனம் கணக்கீடு செய்யும் போது மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் கணக்கீடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விரோத மான காப்பீடு நிறுவன விதிமுறைகளை மாற்றி அமைத்திட வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க தங்குதடை யின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எம்.மேகவர்ணம், எம்.தர்ம ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ். பொன்னுசாமி, சிபிஎம் தாலுகா செய லாளர் தென்றல் கருப்பையா, மாவட்ட குழு உறுப்பினர் கே.தங்கராஜ் சிறப்புரையாற்றி னர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் மனுக்களை வழங்கினர்.