மயிலாடுதுறை, மார்ச் 13- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் உதவிமின் பொறியாளர் அலுவல கத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் புதனன்று போராட் டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ் தலைமை வகித்தார். போராட்டத்தில், ஆக்கூர், மாமா குடி, சவுரியாபுரம், மருதம்பள்ளம், மாத் தூர், பஞ்சாகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு 2020-22 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மின் மோட்டார் இலவச இணைப்பு வழங்க வேண்டும். வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். குறைந்தழுத்த மின்சாரத்தால் அவதியுறும் பஞ்சாகை கிராம மக்கள் மும்முனை மின்சாரம் வேண்டி கோட்ட பொறியாளரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் விவசாயி களை அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டி ஏராளமான விவசாயிகள் அலு வலகம் முன்பு முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் விஜய பாரதி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசா யிகளிடம், “கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். இதையடுத்து போராட் டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தெட்சிணா மூர்த்தி, கண்ணகி மற்றும் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.