திருவண்ணாமலை, அக். 18- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உழவர் சந்தையில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கடை நடத்த அனுமதி அளிக்க வில்லை. மாறாக, படவேடு பகுதியைச் சேர்ந்த வாழை இலை வியாபாரி ஒரு வரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரது குடும்பத் தாருக்கு கடைகளை கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆரணி உழவர் சந்தை யில் தனிநபர் ஆக்கிரமிப்பு களை தடுத்து, விவசாயி கள் பல்வேறு வகை யில் அலைக்கழிக்கும் வேளாண்மை அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்ரா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.