கரூர், நவ.23 - கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சிந்தளவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நூறுநாள் வேலையை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்ற நபர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பதை கண்டித்தும், தகுதியுடைய அனைவருக்கும் நூறுநாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிந்தளவாடி ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றியச் செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கா.கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செய லாளர் தர்மலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடைப ெற்ற பேச்சு வார்த்தையில், கிருஷ்ணரா யபுரம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார், லாலாப்பேட்டை காவல் ஆய்வாளர் சர வணன், விச மாவட்டச் செயலாளர் கா. கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், “நூறு நாள் வேலை பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அலு வலர்கள் உறுதியளித்தனர்.