திருவாரூர், அக்.28 - குறுவை பயிர்களுக்கான நிவாரண இழப்பீட்டில், விடுபட்டுள்ள பகுதிகளை மறு ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, செயலா ளர் எம்.சேகர் ஆகியோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட் டது. பாசன பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தண்ணீர் தட்டுப்பட்டால் மேடான பகுதி களுக்கு தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர் கள் காய்ந்து கருகி போயின. இதனால், மீண்டும் பயிர் செய்து, நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை இறைத்து பயிர்கள் காப்பாற்றப் பட்டன. சிறிய அளவு பெய்த மழையின் உதவி யோடு வளர்ந்த பயிர்கள், மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி களில் ஏக்கர் ஒன்றுக்கு, 10 மூட்டைகள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டது. இதே போன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக் கெடுப்பு கால தாமதமாக எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகள் விடுபட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் ஒன்றி யத்திற்கு மட்டும் நிவாரணத் தொகை அறி விக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிப்பு என்பது அனைத்துப் பகுதிகளிலும் இருந்த நிலை யில், கோட்டூர் ஒன்றியத்திற்கு மட்டும் சுமார் 285 ஹெக்டேருக்கு (7125 ஏக்கருக்கு) மட்டும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மறு ஆய்வு செய்து, விடுபட்டுள்ள பகுதிகள் அனைத்திற்கும் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.