தஞ்சாவூர், ஜூன் 3-
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படவுள்ளதால் விவசாயி கள் தங்களுக்கு தேவையான இடுபொருள் களை பெற, உழவன் செயலியில் முன்பதிவு செய்திடுமாறு பேரர்வூரணி வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘குறுவை சாகுபடிக்கு தேவையான சான்றுபெற்ற விதைகள், நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள் யாவும் பேராவூரணி, திருச்சிற்றம்பலம் மற்றும் சீதாம்பாள்புரம் விரிவாக்க மையங்க ளில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
தரமான சான்று பெற்ற விதைகளை, விதை நேர்த்தி செய்து ஒற்றை நாற்று நடவு முறையில் நடவுப்பணி மேற்கொள்ள வும், நடவு வயலில் கடைசி உழவிற்கு பிறகு நெல் நுண்ணூட்டம் இட்டு நடவு செய்தி டவும், திரவ உயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை இலைவழி உரமாக பயன்படுத்த வேண்டும்.
பேரூட்டச் சத்துக்களில் ஒன்றான தழைச் சத்தை மூன்று கட்டங்களாகவும், பொட்டாஸ் உரத்தை இரு கட்டங்களாகவும் பிரித்து நெல்பயிருக்கு கொடுக்க வேண்டும். நெல் நடவு வயலில் நடவுக்கு முன்பாக தக்கை பூண்டு, பசுந்தாள் உரத்தை ஏக்கருக்கு 20 கிலோ வீதம் விதைத்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் 25 விழுக் காடு தழைச்சத்தை மிச்சப்படுத்தலாம்.
குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகளை விரிவாக்க மையங்களில் உடன டியாக பெற்று, ஜூன்.15 க்கு முன்பாக நாற்று நட்டு, சரியாக 24 நாட்களில் நடவுப்பணி மேற் கொண்டு, தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து தங்களது நெல் பயிரினை பாதுகாத்துக் கொள்ள லாம்.
எனவே, விவசாயிகள் குறுவை சாகு படிக்கு தேவையான இடுபொருட்கள் அல்லது தொழில்நுட்பங்களை பெறுவதற்கு, அந்தந்த தொகுதி வேளாண்மை உதவி அலு வலர்கள் அல்லது வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறுமாறு பேராவூரணி வட்டார விவசாயிகளை கேட்டுக் கொண்டு உள்ளார்.