மயிலாடுதுறை, ஜன.29 - மணல்மேடு அருகேயுள்ள கொண் டல் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசா யம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பம்புசெட் நீரை கொண்டு மயி லாடுதுறை, குத்தாலம். தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதிகளில் அதிக அள வில் செப்டம்பர், அக்டோபர் மாதத்தி லேயே சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு சம்பா, தாளடிக்கு மேட்டூர் அணை மூடப்பட்டு தண்ணீர் இல்லாததால் மழைநீரை கொண்டு பல விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஜன வரி முதல் வாரத்தில் அறுவடை பணிகள் தொடங்கின. ஜன.8 அன்று பெய்த கன மழையால் அறுவடை பாதித்ததோடு கதிர்கள் முற்றும் தருவாயில் இருந்த பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மிதந்தன. மழைவிட்டு வெயில் அடிக்கத் தொடங்கியதும், விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கினர். கடந்த ஒரு வாரமாக அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஜன.22 அன்று மாவட்டத்தில் 60 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கூறி, காளகஸ்திநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொள் முதல் பணியை தொடங்கி வைத்தார். ஆனால் இதுவரை 10 கொள்முதல் நிலை யங்களில்கூட நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை காயவைத்து, கொள்முதல் நிலைய வாயிலில் கொட்டி வைத்து இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர். இந்நிலையில் தாழஞ்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்ப டாததால், நெல் மூட்டைகளுடன் காத்துக் கிடக்கும் விவசாயிகள், மயிலாடுதுறை-மணல்மேடு வழித்தடத்தில் கொண்டல் பகுதியில் நெல் மூட்டைகளை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணல் மேடு காவல்துறையினர் மற்றும் வரு வாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்ட விவ சாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.