தஞ்சாவூர், ஜூலை 5 -
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 2023 ஆம் ஆண்டு, தமிழக அரசினால் வேளாண்மை-உழ வர் நலத்துறை மூலமாக குறுவை சிறப்பு தொ குப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வேளாண் மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குறுவை நெல் சாகுபடி யினை ஊக்குவிக்கும் பொருட்டு, மே 1-க்கு பிறகு குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயி களுக்கு ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டமும், ஆடிப்பட்டத் தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 80 கிலோ நிலக்கடலை விதை 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
சிறுதானிய சாகுபடிக்கு சிறுதானிய விதை 4 கிலோ, சூடோமோனாஸ் மற்றும் திரவ உயிர் உரங்கள் ஒரு ஏக்கருக்கான மதிப்பில் 50 விழுக் காடு மானியமும், குறுவை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு தேவை யான 8 கிலோ உளுந்து விதையும், சூடோமோ னாஸ் மற்றும் திரவ உயிர் உரங்கள், திரவ இயற்கை உரங்கள் மற்றும் தெளிப்புக்கான 50 விழுக்காடு மானியமும் இந்த குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.
எனவே இந்த திட்டத்தில் பயன்பெற அந்தந்த பகுதி விவசாயிகள் நேரடியாகவே தங்க ளுடைய ஆண்ட்ராய்டு தொலைபேசியில் உள்ள உழவன் செயலியில் முன்பதிவு செய்தி டலாம். அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகியோ, வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத் தில் இயங்கும் திட்ட உதவி மையத்தை தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்யலாம்.
மேலும், இத்திட்டத்திற்கு தேவையான ஆவ ணங்களான சிட்டா அடங்கல், கணினி சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் தொலைபேசி எண் ஆகிய வற்றுடன் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.