தஞ்சாவூர், ஜூலை 19 -
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர்(பொ) பழனிவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஜூலை 21 அன்று (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர் வரு வாய் கோட்ட அலுவலகத்தில், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர்(பொ) பழனிவேல் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சை, திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்டார விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக் களை வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.