திருச்சிராப்பள்ளி, மே 10-
சிறுகனூர் பெருவளப்பூரில் கோவில் திருவிழாவில், பள்ளி மாணவனை லத்தியால் தாக்கிய காவல் துறையினரிடம் எதற்காக மாணவனை அடிக்கிறீர்கள் என கேட்ட மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சூரியா, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பிரதாப், முன் னாள் மாவட்டக் குழு உறுப்பினர் கோபால் ஆகியோரை காவல் துறையினர் விசாரணை என அழைத்து சென்று தரக்குறைவாக பேசி தாக்கினர்.
இதை கண்டித்து சிறுகனூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறை டிஎஸ்பி அஜய் தங்கம் உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங் கத்தினரை காவல்துறை கைது செய்தது. மேலும் சூரியா உள்ளிட்ட 3 பேர் மீது பொய் வழக்கும் போடப் பட்டது.
இந்நிலையில், மாணவர் சங்க தலைவர்கள் மீது சிறுகனூர் காவல் துறையினரால் போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரியும், விசாரணை என அழைத்து சென்று தரக்குறைவாக பேசி தாக்கிய காவல் துறையை கண்டித்தும் மாணவர் சங்கம், வாலி பர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளுடன் இணைந்து புதனன்று எஸ்.பி அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஹரி ராமசந்திரன் தலைமை வகித் தார். மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் மோகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டத் தலைவர் லெனின், துப்பு ரவு சங்க மாவட்டச் செயலாளர் மாறன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலா ளர் ஆர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இசை, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் வாலிபர் சங்க தலைவர்கள் கார்த்திகேயன், வெற்றிச்செல்வன். மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள், மாவட்டச் செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.