கும்பகோணம், செப்.24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில், நாச்சியார்கோவில் லயன் சங்கம், கும்பகோணம் கிரின் டவுன் லயன் சங்கம் மற்றும் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை, முருக்கங்குடி ஆரம்ப சுகாதார மையம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் முருக்கங்குடி ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் குழுவினர், இதில் பங்கேற்ற ஏராளமான மக்களுக்கு நவீன இயந்திரங்களைக் கொண்டு பரிசோ தனை செய்தனர். இதில் 300 பேருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு, 50 பேரை இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து, தஞ்சாவூர் ராசா மிராசு தார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நாச்சியார்கோவில் லயன் சங்க தலைவர் ராஜேந்தி ரன், செயலாளர் முத்து, பொருளாளர் பாலமுருகன், ஷபிக்குல் ரகுமான், வழக்கறிஞர் பழனிவேல் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.