புதுக்கோட்டை, டிச.5 - புதுக்கோட்டை அருகே பட்டாசு தயா ரிப்புக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில், அதன் உரிமையாளர் படுகாயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி அருகே அடப்பன்வயல் பகுதியில் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயா ரிப்புக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில், செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10.30 மணிக்கு ஒரு கூடத்தில் பலத்த சப்தத்துடன் வெடிவிபத்து நேரிட்டது. கான்கிரீட் சுவர் களைக் கொண்ட அந்தக் கட்டடம் முழுமை யாக இடிந்து நொறுங்கியது. பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இந்தக் கூடத்தில் அதன் உரிமையாளர் மூர்த்தி (45) இருந்துள்ளார். வெடிவிபத்து சப்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூடினர். பின்பு, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் இ.பானுப்பிரியா ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தி லிருந்து இரு வாகனங்களில் வந்த தீய ணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மூர்த்தி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.