திமுக சார்பில் நிதி நிலை அறிக்கை விளக்கம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தா.பேட்டை, தொட்டியம், காட்டுப்புதூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.