districts

முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 26 -

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  

    முன்னாள் படைவீரர், சார்ந்தோர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டு நிலுவையிலுள்ள மனுக்கள்  ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, திருமண மானியம், வங்கிக்கடன் வட்டி மானியம் மற்றும் கல்வி உத வித்தொகை பயனாளிகளுக்கு ரூ.1,88,986 மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சி.விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.