அடிக்கல் நாட்டு விழா
பாபநாசம், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூரில் நூறு நாள் வேலை திட்டம் 2023 - 24 புதிய ரேசன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் ஊராட்சித் தலை வர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் இந்திரா காந்தி, ஒன்றிய உதவிப் பொறியாளர் சுவாமிநா தன், ஊராட்சி உறுப்பி னர்கள், பள்ளித் தலைமை யாசிரியர் ராஜராஜன், ஆசிரியர் சதீஸ், ரேசன் கடை ஊழியர் மணி கண்டன், ஊராட்சி செயலர் முருகையன் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.
வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
திருவாருர், பிப்.27 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வரு வாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலி யுறுத்தி 3 ஆம் நாளான திங்கள்கிழமை மாலை நேர தர்ணா நடைபெற்றது. தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் விஜய் ஆனந்த் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.
பருத்தி சாகுபடி பயிற்சி
மயிலாடுதுறை, பிப்.27- தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை யின் மூலம் மயிலாடு துறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே மேலப் பெரும்பள்ளம் கிராமத்தில் பருத்தியில் ஒருங்கி ணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி நடை பெற்றது. நிகழ்ச்சியில் செம்ப னார்கோவில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலா ளர் ரேகா வரவேற்று பேசி னார். சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக துணை பேராசிரியர் டாக்டர் ஆனந்தன் (உழவியல் துறை), பயிர் மேலாண்மை குறித்தும், பருத்தி தொழில் நுட்பம் குறித்தும் உரை யாற்றினார். செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை அலு வலர் விண்ணரசி சிறப்பு ரையாற்றினார். வே ளாண்மை விரிவாக்க பணி யாளர் பிரபாகரன் பயிற்சி யில் கலந்து கொண்ட விவ சாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். உதவி தொழில்நுட்ப மேலா ளர் செல்வக்குமரன் நன்றி கூறினார்.
சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சாவூர், பிப்.27 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையில் திங்கட்கிழமை, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சார்பாக சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாள ரும் இலக்கியத் துறைத் தலைவருமான பேரா சிரியர் முனைவர் ஜெ.தேவி வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்து பேசினார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட் டக் கழகத்தின் தலைவர் தமிழ்ச் செம்மல் தங்கம் மூர்த்தி, “ஆதித்தனாரும் அருந்தமிழும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சிறப்புச் சொற் பொழிவாளரான திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் விஜயசுந்தரி, “அன்றைய தந்தியும் இன்றைய அலைபேசியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் இரா.தனலெட்சுமி நன்றி கூறினார்.
கொரோனா காலத்தில் உயர்த்திய கட்டணத்தை குறைத்த ரயில்வே நிர்வாகம்
தஞ்சாவூர், பிப்.27 - கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்ட ணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக் காலத்தில் பயணிகள் ரயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்புக் கட்டணமாக உயர்த்தப்பட்டன. கொரோனா தொற்று முடிந்து இயல்புநிலைக்கு திரும்பினாலும், பயணிகள் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் குறைக்கவில்லை. இதனால் கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை ஏற்று தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் திங்கள்கிழமை முதல் சாதாரண பயணிகள் ரயில்க ளின் கட்டணத்தை முன்பு இருந்த நிலைக்கு குறைத்துள்ளது. ரயில் நிலையங்களில் மீண்டும் பழைய கட்டணத்தில் பயணச் சீட்டு வழங்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேருந்து கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால், அதிகளவிலான ஏழை- எளிய மக்கள் ரயிலை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி மார்க்கத்தில் பேரா வூரணிக்கு 10 ரூபாயும், ஆயங்குடிக்கு 15 ரூபாயும், அறந்தாங்கி காரைக்குடிக்கு 20 ரூபாயும், மயிலாடுதுறை மார்க்கத்தில் அதிராம் பட்டினம் மற்றும் முத்துப்பேட்டைக்கு 10 ரூபாயும், திருவாரூ ருக்கு 20 ரூபாயும், மயிலாடுதுறைக்கு 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி தேர்வில் வெற்றி மயிலாடுதுறை இளைஞருக்கு பாராட்டு விழா
மயிலாடுதுறை, பிப்.27 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் சிவில் நீதிபதி தேர்வை நடத்தியது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள சங்கரன்பந்தல் முனிவலங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன்-அஞ்சம்மாள் ஆகியோரின் மகன் பாலதண்டாயுதம் தேர்ச்சி பெற்றார். இவர், வழக்கறிஞரின் எழுத்தராக பணிபுரிந்து பின்பு சட்டம் படித்து தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி அடைந்த இவரை பாராட்டும் வகையில், செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தரங்கம்பாடி நீதிமன்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி கனிமொழி தலைமை வகித்தார். சிவில் நீதிபதியான பாலதண்டாயுதம் ஏற்புரையாற்றினார். தொடர்ந்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர், பிப்.27- சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய் தவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள கோவிலடியைச் சேர்ந்தவர் சங்கர்(39). திருமண மான இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு இச் சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்ப வைத்து, சங்கர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித் தார். இதையடுத்து, திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சா வூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜ் விசாரித்து, சங்கருக்கு 25 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராத மும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
யோகா பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணியில் ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட் ஃபுல்னெஸ் இன்ஸ்டியூட் சார்பில், யோகா பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் பயிற்சியை பேராவூரணி சட்டமன்ற உறுப் பினர் நா.அசோக்குமார், மருத்துவர் டி.நீலகண்டன் தொடங்கி வைத்தனர். 2 ஆம் நாள் பயிற்சியை பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், வட்டாட் சியர் ஆர்.தெய்வானை, 3 ஆம் நாள் பயிற்சியை தமிழ் நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர், தனம் ஆர்.நீல கண்டன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். இந்த மூன்று நாட்கள் முகா மில் ஓய்வுநிலைப் பயிற்சி, புத்துணர்வு பயிற்சி, உள்முக ஆற்றலுடன் இணைதல் மற்றும் தியானப் பயிற்சி வழங் கப்பட்டது. இதில் நூற்றுக்கணக் கான குழந்தைகள், பெரிய வர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஆண்டு விழா
தஞ்சாவூர், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, அகாடமியின் தலைவர் முனைவர் வேத. கரம்சந்த் காந்தி தலைமை வகித்தார். அகாடமி நிறுவனர் மருத.உதயகுமார் ஆண்டறிக்கை வாசித் தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார், அகாடமியின் ஆண்டு மலர் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. திருக்குறள் பேரவை, ஆதனூர் லெனின் கிளப் நண்பர்கள், பேரை துளிர் நண்பர்கள் அறக் கட்டளை, அகாடமி விளையாட்டு வீரர்களும் பெற்றோர் களும் கலந்து கொண்டனர். முன்னதாக அகாடமியின் பொருளாளர் நெடுவாசல் ராம் குமார் வரவேற்க, செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திருவள்ளுவர் கல்விக் கழகம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்று வருகிறது. பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த வர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பயிற்சி மைய ஆசிரியர் சந்தோஷ் தலைமையில், சமூக ஆர்வ லர் மெய்ச்சுடர் வெங்கடேசன், பயிற்சி மைய பொறுப்பா ளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையின் முதுநிலை மேலாளர் இராகவன் சூரியேந்தி ரன் பரிசு வழங்கி பேசினார். பயிற்சி மைய ஆசிரியர் கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக பிரச்சாரம்
தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூர் கழகம் சார்பில், பேரூர் கழகச் செயலாளர் என்.எஸ்.சேகர் ஏற்பாட் டில், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட ஆதனூர் பகுதி யில், “இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்” பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி பேரூ ராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். இதில், திமுகவினர் ஒவ்வொரு வீடாகச் சென்று மகளி ருக்காக திமுக அரசு செய்துள்ள சிறப்பான திட்டங்களை முன்னிலைப்படுத்தி கூறி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.
அரசு கல்லூரியில் முப்பெரும் விழா
தஞ்சாவூர், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விளையாட்டு விழா, முத்தமிழ் விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி.ராணி வர வேற்றார். பட்டிமன்றப் பேச்சாளர் பி.சுப்பையா சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் உட்பட 1200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் கட்டுநர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம்
புதுக்கோட்டை, பிப்.27 - கனிமப் பொருட்களின் கடுமையான விலையேற்றத் தைக் கண்டித்து அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பாக செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் பேராட்டம் நடைபெற்றது. நடப்பு (2023-24) ஆண்டில் மட்டும் கருங்கல், ஜல்லி வகைகள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய கனிமப் பொருட் கள் 50 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இத னால், அரசு துறைகளில் ஒப்பந்தங்கள் எடுத்துள்ள ஒப்பந்தக்காரர்கள், தொடர்ந்து கட்டுமானப் பணிகளை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்படி கனிமப் பொருட்க ளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி அகில இந்திய கட்டுநர் சங்கம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அமைப்பின் சார்பாக செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை யில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடை பெற்றது. வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகி கள் தாமரை செல்வன், இளங்கோ, ஜபரலி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
இடைநிலை ஆசிரியர்கள் 2ஆவது நாளாக போராட்டம்
புதுக்கோட்டை, பிப்.27 - ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடை நிலை ஆசிரியர்கள் புதுக்கோட்டையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஒரே கல்வித்தகுதி, ஒரே பதவிக்கு இருவேறு ஊதி யங்கள் வழங்கப்பட்டு வரும் முரண்பாட்டை சரி செய்யக்கோரி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனொரு பகுதி யாக, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் அலுவலகம் முன்பாகவும் இந்தப் போராட்டம் நடை பெற்று வருகிறது. போராட்டத்திற்கு மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப் பாளர் அனோன்சியா தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி நிர்வாகிகள் பேசினர்.
லஞ்ச வழக்கில் முன்னாள் துப்புரவு ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர், பிப்.27- இறப்பு பதிவில்லா சான்று வழங்கு வதற்கு லஞ்சம் பெற்ற தஞ்சாவூர் மாநக ராட்சி முன்னாள் துப்புரவு ஆய்வாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாப் பேட்டை சாலியதெருவைச் சேர்ந்தவர் மணி கண்டன் (43). இவர், 2008 ஆம் ஆண்டில் மகர்நோன்புசாவடி பகுதியில் வசித்த தனது தாய் கலைச்செல்வி இறந்தபோது பதிவு செய்யவில்லை. இதனால், இறப்பு பதி வில்லா சான்று கோரி தஞ்சாவூர் மாநக ராட்சி அலுவலகத்தில் மணிகண்டன் 2016 மே 19 அன்று விண்ணப்பம் செய்தார். அப்போது மகர்நோன்புசாவடியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலுள்ள கணினி வரிவசூல் மையத் தில், மாநகராட்சியின் ஏழாவது கோட்ட துப்புரவு ஆய்வாளராகப் பணியாற்றிய ஏ. தாமஸ் பெர்னாட்ஷா (தற்போது 64 வயது) ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதைக் கொடுக்க விரும்பாத மணி கண்டன் தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் அளித்ததன் பேரில், ஊழல் காவல் தடுப்பு பிரிவினர் 2016 ஆக.16 அன்று தாமஸ் பெர்னாட்ஷாவை மறைந் திருந்து கண்காணித்தனர். அப்போது, மணி கண்டனிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாமஸ் பெர்னாட்ஷாவை ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் கைது செய்தனர். இது தொடர்பாக கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி.சண்முகப்ரியா விசாரித்து தாமஸ் பெர்னாட்ஷாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராத மும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித் தார்.