சென்னை,ஏப்.29
காந்தி தேசத்தை கார்பரேட் மயமாக்குவதா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை தி.நகரில் நடைபெற்றது.
மூத்த பத்திரிகையாளர் “அறம்” சாவித்திரி கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் இந்நிகழ் வில் பங்கேற்று பேசியது வருமாறு:
“கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரி கையாளர்கள் பங்கேற்றுள்ள இந்த அவையில் இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.
மத்திய பா.ஜ.க.அரசு போல எதிர்க்கட்சி களின் கருத்துகளை கேட்காமல் தமிழ்நாட்டு அரசு அவசர அவசரமாக நிறைவேற்றிய சட்டங்களான 12 மணி நேர வேலை திட்டம், விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங் களுக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கி ணைப்பு சட்டங்கள் மக்கள் நலனுக்கு எதிரா னவை. இங்கு தொழில் தொடங்க வாருங்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்தே இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டதன் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் தொழிலாளர்களை எவ்வளவு வேண்டு மானாலும் பிழிந்து வேலை வாங்கிக் கொள்ள லாம், நிலங்களை தாராளமாக பெற்றுக் கொள்ளலாம் என்பதை இந்த சட்டங்கள் வாயிலாக சொல்லாமல் சொல்லி உள்ளனர் ஆட்சியாளர்கள். தோழமைக் கட்சிகள் மற்றும் தொழிலாளர்கள், பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு இந்த சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
நிறுத்தி வைத்தல் போதாது வாபஸ் வாங்குவதுதான் சரியான நடவடிக்கை ஆகும். நெடுவாசல், ஜல்லிக் கட்டு, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு உட்பட பல்வேறு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி அரசியல் கட்சிகளால் அல்ல, மக்க ளால் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.