districts

img

மாயனூரில் தண்ணீர் திறந்து 23 நாளாகியும் பூதலூரில் ஏரி, குளங்களுக்கு வரவில்லை!

தஞ்சாவூர், ஆக.23 -  மேட்டூர் அணையிலிருந்து மாயனூர் வாய்க்கால் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து 23 நாட்களாகியும் இதுவரை பூத லூர் வட்டாரத்தில் உள்ள ஏரி,  குளங்களுக்கு தண்ணீர் வர வில்லை. எனவே ஒரு போக சம்பா  சாகுபடிக்காவது அரசு உத்தர வாதம் அளிக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை கோட்ட அளவிலான விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா  தலைமை வகித்தார். வேளாண் துறை, கூட்டுறவுத்துறை, நீர்வள  ஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசி யதாவது:  காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இந்தாண்டு முறையாக நீர் மேலாண்மையை கையாள வில்லை. இதனால் தண்ணீர் கட லில் சென்று வீணாகியது. ஏரி,  குளங்களை தூர்வாரும் போது  நீர் வழிப்பாதையை முதலில்  தூர்வாரி தண்ணீர் தேக்க  வேண்டும். ஆனால் நீர்வழிப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே காணப் படுகின்றன. ஒருபோக சாகுபடிக்காவது உத்தரவாதம் வேண்டும் ஒரு பக்கம் உபரி நீர் கட லில் வீணாகியது; ம‌ற்றொரு புறம்  நீர்நிலைகள் வறண்டே காணப்படு கின்றன. இந்தப் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம்  செலுத்த வேண்டும். காவிரி ஆற்றி லிருந்து மாயனூர் வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்து 23 நாட்க ளாகிறது. ஆனால், பூதலூர் வட்டா ரத்தில் உள்ள 135 ஏரிகள் மற்றும்  குளங்களுக்கு இதுவரை தண்ணீர்  வரவில்லை. தண்ணீர் வருமா வராதா என தெரியவில்லை. இந்த  பகுதியில் ஒரு போக சம்பா சாகு படிக்காவது உரிய உத்தரவா தத்தை அரசு வழங்க வேண்டும். செங்கிப்பட்டி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் உய்யக்கொண் டான் நீட்டிப்பு வாய்க்கால் பகுதி யின் குறைகளை விவசாயிகள் தெரிவிக்கும் வகையில், அந்த வாய்க்கால் தொடர்பான பிரிவு அலுவலகத்தை தஞ்சாவூரில் ஏற்படுத்த வேண்டும். சம்பா சாகு படிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  ரொக்கமாக வழங்காமல், உரங் களை மானியத்தில் வழங்க வேண்டும். மாவட்டத்தில் வெளிமாநிலங் களிலிருந்து வந்து வயல்களில் வாத்து மேய்க்கின்றனர். இதனால், இந்த வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர் களுக்கு தோல் வியாதி ஏற்படு கிறது. எனவே இதுகுறித்து உரிய  ஆய்வு செய்ய வேண்டும். கடந் தாண்டு சம்பா பருவத்தில் பயிர்க்  காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்படு கிறது. இதற்கான பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளிப்படை யாக வெளியிட வேண்டும். ஒரத்தநாடு அருகே ஆம்பலா பட்டில் உள்ள 230 ஏக்கர் பரப்ப ளவு கொண்ட ஆண்டாள் ஏரிக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. உடனடியாக தண்ணீர் விட வேண் டும். சம்பா சாகுபடி தொடங்கி யுள்ள நிலையில் போதிய அளவு விதை நெல் வேளாண்துறை மூலம்  விநியோகம் செய்ய வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் இரு சக்கர வாகனங்களில் மணல் கடத்தல் என்பது நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. இதனை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கை கள் குறித்து உடனே மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு  சென்று தீர்வு காணப்படும் என  தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சி யர் செ.இலக்கியா தெரிவித்தார்.