districts

img

சமத்துவப் பொங்கல் விழா

திருச்சிராப்பள்ளி, ஜன.19- சாதி, மத பேதங்களை வேரறுப்போம், மக்கள் ஒற்றுமையை காப்போம் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் காந்திநகரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.  விழாவில் வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர்  பா.லெனின், பகுதி நிர்வாகிகள் யுவராஜ், செந்தில், சந்தோஷ், நிவேதா, வெங்கடேஷ், ஜான்சிராணி, கங்கா, சத்தியா, சசி, காயத்ரி, திவ்யா, நித்யா, மது, வர்ஷா, மோகன் ஜாபர், அசோக் மற்றும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.