திருவாரூர், ஜூன் 21 -
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சமுதாயக் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் ஓராண்டு கல்வெட்டி யல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பிற்கான ஒன்பது நாள் பயிற்சி முகாம் ஜூன் 10 முதல் 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
நாட்டில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் பயிற்சி அளித்தனர். இந்திய மற்றும் தமிழகக் கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, பல்லவர், சோழர், பாண்டி யர் கால வட்டெழுத்துகள், இடைக்காலச் சோழர், பிற் காலப் பாண்டியர், நாயக்கர், ஐரோப்பியர் கால தமிழ்க் கல்வெட்டுகள், பல்லவர், சோழர், பாண்டியர், செப்புப் பட்டயங்கள், தமிழக ஓலைச்சுவடிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
மேலும் தமிழக வரலாற்றை எழுதுவதற்கான, மூல ஆவணங்களைப் பாதுகாக்கும் முறையில் மரபு மேலாண்மை என்ற புதிய பாடப் பயிற்சி, வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்துப் பயிற்சி, கல்வெட்டுகள் மற்றும் செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பயிற்சி மாண வர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியில் தென்காசி, திரு நெல்வேலி, சென்னை, புதுக்கோட்டை, திருவண்ணா மலை, திருப்பூர், தஞ்சை மற்றும் திருவாரூர் சுற்று வட்டா ரப் பகுதிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பட்டயப் படிப்பில் பயிற்சி பெற்றவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப் படிப் பின் பொறுப்பாசிரியரும் தமிழ்த்துறைப் பேராசிரியரு மான ச.ரவி ஒருங்கிணைப்பில், 9 நாள் தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.