districts

img

மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, செப்.26 - மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அக விலைப்படி உயர்வை உடனே  வழங்க வேண்டும். மருத்துவ  காப்பீடு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். மாதந்தோ றும் முதல் தேதியிலேயே ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு சார்பில் திங்களன்று  தொடர் காத்திருப்புப் போராட் டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல அலு வலக முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு போராட்டக் குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சிராஜுதீன் போராட் டத்தை தொடங்கி வைத்தார்.  போராட்டத்தை விளக்கி போராட் டக் குழு இணை ஒருங்கி ணைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.  இப்போராட்டத்தில் திருச்சி,  கரூர், புதுக்கோட்டை, காரைக் குடி ஆகிய 4 கோட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் கும்பகோணம் தலைமை அரசு போக்குவரத்து கழகம்  முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு மண்டல துணைத் தலைவர் கென்னடி தலைமை வகித்தார். மண்டல தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். போராட்டத்தை விளக்கி தஞ்சை கோட்ட செயலாளர் பாஸ்கரன், ஞானசேகரன் ஆகியோர் பேசினர். மாநில துணைச் செயலாளர் எஸ்.சின்னசாமி நிறைவுரை ஆற்றி னார். கூட்டமைப்பின் பொறுப்பா ளர்கள் சிஐடியு திருநாவுக் கரசு, தாமோதரன் உட்பட  கும்பகோணம், நாகை, தஞ்சை,  திருவாரூர், திருவையாறு, திருத்துறைப்பூண்டி, மன்னார் குடி கிளைகளிலிருந்து  சுமார் 700 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.