districts

img

40 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு நிதியத்தை உருவாக்குக!

திருச்சிராப்பள்ளி, ஆக.16 - 40 கோடி முறைசாரா தொழிலா ளர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு நிதி யத்தை உருவாக்கிட வேண்டுமென கோ ரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட வேண்டும். தொழிலாளர் நலச்  சட்டத் திருத்த தொகுப்புகளை திரும்ப பெற  வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், மாநில அரசு துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.  அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் முறையை  ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிட வேண்டும். 40 கோடி  முறை சாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு நிதியத்தை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன.  இதன் ஒரு பகுதியாக “விடியலை நோக்கி - விடுதலை நாள் நினைவுகள்” என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சியும் மற்றும் பொதுக் கூட்டம் உறையூர் குறத்தெருவில் நடந்தது.  கூட்டத்திற்கு தொ.மு.ச பேரவை செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித் தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனி வாசன், தொ.மு.ச பேரவை தலைவர் குண சேகரன், தொமுச பேரவை பொருளாளர் ரவி,  ஏஐடியுசி மாவட்டத் தலைவர் நடராஜா, மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் சொக்கி சண்முகம், ஐஎன்டி யுசி மாவட்டத் தலைவர் வெங்கட்நாராய ணன், ஐஎன்டியுசி அமைப்புசாரா மாவட்டத்  தலைவர் எஸ்.ஆர்.ஆறுமுகம், ஏஐசிசிடியு ஞானதேசிகன், எச்.எம்.எஸ் ஜான்சன், எல்.எல்.எப் தெய்வீகன், எல்டியூசி கார்த்திகே யன் ஆகியோர் பேசினர்.