திருச்சிராப்பள்ளி, ஏப்.18- ஆட்டோக்களுக்கு அநியாயமாக உயர்த்தப் பட்ட எப்.சி.கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். காலதாமதமான எப்.சி. களுக்கு தினமும் ரூ.50 அப ராதம் விதிப்பதை கைவிட வேண்டும். 15 வருட பழைய ஆட்டோவிற்கு எப்.சி. கட்டணம் 10 மடங்கு உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல் படுத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் திங்களன்று பிராட்டி யூர் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாநகர் மாவட்ட தலை வர் ஜெயபால் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜ், ஆட்டோ சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் மணி கண்டன், புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத், மாவட்ட தலைவர் நவமணி ஆகியோர் பேசினர். இதில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.