திருச்சிராப்பள்ளி, டிச,28- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். குடும்ப நலநிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கி யுள்ளதை மின்வாரியத்தில் அமல்படுத்த வேண்டும், கேங்மேன் பணியாளர்களில் ஊர் மாறுதல் கேட்டுள்ள அனைத்து விண்ணப்பித் தனையும் பரிசீலித்து உடனடி யாக சொந்த ஊருக்கு மாறு தல் அளிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி டி.என். இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் தென்னூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தென்னூரில் உள்ள மின் வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்க தலைவர் சத்திய நாராயணன் தலைமை தாங் கினார். மண்டல செயலாளர் காளிதாஸ்,மகளிர் அணி ஜெசித்தா, வட்ட செயலாளர் சிவ செல்வன் ஆகியோர் விளக்கி பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.