நீடாமங்கலம், ஜூன் 19-
முடிவடையாமல் உள்ள வேளாண் மராமத்துப் பணிகள் விரைந்து முடித்திட வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க வேண் டும். காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். அட மானம் ஏதும் இல் லாமல் 1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்பு சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஊராட்சிகளில் பல இடங்களில் மராமத்து கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையில், மிக வும் மந்தக் கதியில் பணிகள் நடை பெற்று கொண்டிருக்கின்றன. தூர் வாரும் பணிகளில் ஆங்காங்கே சிறிய சிறிய பாலங்கள் கூட பணி கள் நடைபெற்று கொண்டிருக்கி றது. இத்தகைய பணிகள் குருவை சாகுபடிக்கு வருகிற தண்ணீரை தடுத்து காலதாமதம் செய்ய வைக்கும்.
எனவே துரிதமாக பணிகளை செய்து முடித்திட வேண்டும். தூர்வாரும் பணிகள் C, D வாய்க் கால்களில் ஓரிரு நாட்கள் பணி களை நீட்டித்துக் கொள்ளலாம்.
விவசாயத்திற்கு தேவையான விதைகள் அரசு வேளாண்மை துறையில் குறிப்பிட்ட, ஒரு சில ரகங்களை மட்டுமே வைத்திருக்கி றார்கள். தனியாரிடம் புதிய ரக விதைகள் வரவழைக்கப்பட்டு தயா ராக வைத்திருக்கிறார்கள். அதை விவசாயிகள் வாங்கும் போது கூடு தல் விலை கொடுத்து வாங்க வேண் டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அரசு டெப்போக்களில் 50 கிலோ விதை நெல் என்ன விலையோ அதே விலை தான் 30 கிலோ விதை தனி யாரிடம் கிடைக்கிறது. மானியமும் கிடைக்கவில்லை இருபது கிலோ விதையும் விவசாயிகளுக்கு நஷ் டம் ஏற்படுகிறது. இதை உடனடி யாக சரி செய்திட வேண்டும்.
மேலும் குறுவை தொகுப்பு திட்டத்தை விரிவாக விளக்கி விவ சாயிகளுக்கு தெரிவிக்க வேண்டு மானால் கோட்டாட்சியர் தலைமை யிலான விவசாயிகள் குறைதீர்க் கும் கூட்டம் உடனடியாக நடத்தப் பட வேண்டும்.
விவசாயிகளுக்கு பல மாவட் டங்களில் அடமானம் ஏதும் இல்லா மல் 1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே, அடமானம் பத்திரம் இல்லாமல் ஒரு லட்சத்து 60 ஆயி ரம் வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கினால் உதவியாக இருக் கும். இதேபோல், திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கும் 1 லட்சத்து 60 ஆயிரம் கடன் வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு பாமினி உரத் தொழிற்சாலையில் இருந்து விவ சாயிகளுக்கு பாமணி உரம் வழங்கு வதற்கான கூடுதல் முயற்சி நடை பெற்று வருகிறது இதை வரவேற்கி றோம் உரம் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட உறுதிப்படுத்த வேண் டும்.
விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில், 12, 13 ஆண்டுகள் இல வச மின் இணைப்புக் கோடி விண் ணப்பித்த விவசாயிகளுக்கு உட னடியாக மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறி வித்துள்ளார். ஆனால் அதுவும் முழுமை அடையாமல் இருக்கிறது. அதை முழுமையாக வழங்கினால் விவசாயிகள் மிக்க மகிழ்ச்சி அடை வார்கள்.
எனவே அரசு விவசாயிகள் மீது கூடுதல் அக்கறை செலுத்தினால் நிச்சயமாக கடந்த ஆண்டு விவசாய பரப்பளவு அதிகரித்ததை போல இந்த ஆண்டும் விவசாய பரப்ப ளவு அதிகரிக்கும். அதே போல கடந்தாண்டு உற்பத்தி அதிகரித் தது போல இந்த ஆண்டும் நெல் உற்பத்தியை விவசாயிகள் உற் பத்தி செய்து வழங்குவார்கள்’’ எனத் தெரிவித்தார்.