districts

img

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுக!

கும்பகோணம், நவ.27 - மின்சார சட்டத் திருத்த மசோதா  2021-ஐ திரும்பப் பெறவும் மூன்று  வேளாண் சட்டங்களை நாடாளு மன்றத்தின் மூலமாக திரும்பப் பெற வும், தொழிலாளர்களின் உரிமை களை பறிக்கும் சட்ட மசோதாவை திரும்பப் பெறவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வலியுறுத்தியும் கும்பகோணத்தில் தமிழ்நாடு மின்வா ரிய தொழிற் சங்கங்களின் கூட்டு  நடவடிக்கை குழு சார்பில் கும்பகோணம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மின் அமைப்பு  பொறியாளர் கழக மாவட்ட செய லாளர் மகாலிங்கம் தலைமை வகித் தார். சிஐடியு கோட்ட தலைவர் ராதா, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி பஞ்சு ராஜேந்திரன், பொறியாளர் சங்க நிர்வாகி சிங்காரவேலு, எம்ப்ளாயீஸ் பெடரேஷன் நிர்வாகி மோகன்தாஸ், அம்பேத்கர் சங்க நிர்வாகி ஸ்டாலின் ஆகியோர் விளக்க உரையாற்றினர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில், தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பு மாநில துணை தலை வர் எஸ்.ராஜாராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.