districts

திருச்சி முக்கிய செய்திகள்

டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் சாவு

திருச்சிராப்பள்ளி, டிச, 28- திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் டாஸ்மாக் மதுபான பார் உள்ளது. இங்கு கடந்த 21 ஆம் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.  அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் அரசு மருத்துவமனை யில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப் பட்டுள்ளது. இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் அருள்ஜோதி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தில்லை நகர் மருத்துவமனைக்கு  கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண் மாயம்

​​​​​திருச்சிராப்பள்ளி, டிச.28-  திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா (வயது 35). இவரது மனைவி பர்வீன் பானு (வயது 30). நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் தன்னுடைய ஐந்து மாத குழந்தை உமைராவுடன் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றவர் பின்பு வீடு திரும்ப வில்லை. இதனால் அவரது கணவர் ரஹ்மத்துல்லா, தில்லைநகர் காவல் நிலையத்தில் தனது மனைவியும், தனது 5 மாத குழந்தையும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இது குறித்து தில்லைநகர் காவல் ஆய்வாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகின்றார்.

அதிமுக எம்எல்ஏ மீது அதிமுக கவுன்சிலர் கொலை மிரட்டல் புகார்

திருவில்லிபுத்தூர், டிச.27- அதிமுக திருவில்லிபுத்தூர் மாவட்ட கவுன்சிலரான கணேசன், நகர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ண னிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், ‘‘தான் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருந்து வருவதாகவும் கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தனது வார்டு பகுதிக்கு  எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை. இது குறித்து பலமுறை  தான் கோரிக்கை விடுத்தும் தான் செல்லும் கட்சி கூட்டங்களுக்கு வரும் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தனக்கு  கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.  இந்நிலையில், டிசம்பர் 25 அன்று எனது அண்ண னான செல்வத்தை தொடர்பு கொண்ட மான்ராஜ், மாவட்ட  கவுன்சிலர்கள் கூட்டத்தில் வைத்து தன்னைக் கொன்று விடுவேன் என்றும் தனக்கு கொலை செய்வது ஒன்றும் புதி தல்ல என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்’’ என்று கூறப் பட்டுள்ளது. புகார் மனு தொடர்பாக நகர் காவல் நிலைய ஆய்வாளர், வன்னியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டு சிறை

தேனி, டிச.27- தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ஓவுலாபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று அதே ஊரைச் சேர்ந்த திம்மன் மகன்  காளிமுத்து (60) என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி யதாக சிறுமியின் தாயார் போடி மகளிர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு தேனி போக்சோ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. புதன்கிழமை வழக்கு  விசாரணைக்கு வந்தது. விசாரணையை முடித்து வைத்த  நீதிபதி கணேசன், காளிமுத்துவை குற்றவாளி என தீர்ப்ப ளித்து, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு மெய் காவல் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

பெண்ணிடம் நகை பறிப்பு

தேனி, டிச.27- தேனி மாவட்டம் போடி கீரைக்கடை தினசரி சந்தை அருகே அய்யணன் தெருவில் வசிப்பவர் காந்தியம்மாள் (60). இவர் வீட்டு முன் நின்றிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் ஒருவர் வாக னத்தில் இருந்து இறங்கி காந்தியம்மாளிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.  காந்தியம்மாளும் வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளார். அப்போது தண்ணீர் கேட்ட இளை ஞர் காந்தியம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை யை அறுத்துக் கொண்டு தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிவிட்டார். இதுகுறித்து அறிந்து போடி காவல் துணை கண்கா ணிப்பாளர் பெரியசாமி, போடி நகர் காவல் ஆய்வா ளர் புவனேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரித்தனர்.

ஜன.2 தனி விமானத்தில் பிரதமர் திருச்சி வருகை

திருச்சிராப்பள்ளி,  டிச, 28- திருச்சி விமான நிலை யத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய முனை யத்தின் திறப்பு விழா ஜனவரி 2 ஆம் தேதி நடை பெற உள்ளது.  இதனை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங் களை தொடங்கி வைக் கிறார்.  இந்த விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர் களும் கலந்து கொள்கிறார் கள். தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட வில்லை.  இந்தநிலையில் அவர் களுக்கான பட்டமளிப்பு விழா வருகிற 2 ஆம் தேதி நடைபெறுகிறது.  இந்த விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவி களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்று கிறார்.

கார் மோதி தொழிலாளி பலி

ஒட்டன்சத்திரம், டிச.28-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெருமாள்கோவில் வலசைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவராஜ் (56). இவர் நேற்று காலை டீ குடிப் பதற்காக பெருமாள் கோவில்வலசில் தாராபுரம்- ஒட்டன்சத்திரம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந் தார். அப்போது கோயம் புத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோதிய தில் சிவராஜ் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார்.

குடிநீரை கொதிக்க வைத்து, குடிக்க அறிவுறுத்தல்

தூத்துக்குடி, டிச. 28  தூத்துக்குடி மாவட்டத் தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக குடிநீர் ஆதாரங்களில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தால், குடிநீரேற்று நிலை யங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் அனும திக்கப்பட்ட அளவில் குளோ ரினைக் கலந்து விநியோ கிக்கவும், நுகர்வோருக்கு குடிநீர் சென்றடையும் இடத்தில் குடிநீரில் உள்ள குளோரின் அளவினைக் கண்காணிக்கவும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நக ராட்சி மற்றும் ஊராட்சி களுக்கு உத்திரவிடப் பட்டுள்ளது. அதன்படி, குளோரின் கலந்த குடிநீர் மட்டுமே பொதுமக்களுக்கு உள்ளாட்சிகளால் விநி யோகம் செய்யப்பட்டு வரு கின்றது. இருப்பினும், குடி நீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிக ளிலிருந்து பொதுமக்க ளுக்குச் சென்றடையும் குழாய்களில் உள்ள சிறு சிறு துளைகள் மூலமாகவோ அல்லது பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடங்க ளிலோ குடிநீரில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடிநீர் ஆலை களைக் கண்காணிக்கவும் உணவு பாதுகாப்புத் துறை க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குடிநீர் ஆலைகளில் தயார்  செய்யப்படும் குடிநீர் சுத்தி கரிக்கப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்படும் குடி நீரினை, ஆலையின் உள் பகுப்பாய்வகம் மற்றும் தேசிய தரச்சான்று பெற்ற பகுப்பாய்வகத்தில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையினை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட ஆலை உரி மையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சுத்திகரிக் கப்பட்டு 20 லிட்டர் கேன்க ளில் அடைக்கப்பட்டு, விற்ப னை செய்யப்படும் குடிநீரா னது, அதனை பாட்டிலில் அடைக்கும் போதோ அல்லது அவற்றின் விநி யோகத்தின் போதோ, அக்குடிநீரில் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வகைக் குடிநீரையும் நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்த பின்னர் பருக வேண் டும். குடிநீரில் குளோரின் கலக்காமல் விநியோகம் செய்யப்பட்டாலோ அல்லது குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக சந்தே கித்தாலோ சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்குத் தகவல் வழங்க வேண்டும் என்றும், சுத்திகரிக்கப்பட்டு, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரின் தரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உணவு பாதுகாப்புத் துறை, தொலைபேசி எண்:94440 42322 க்கு தகவல் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

கன்றுகளுக்கு பரவும் அம்மை நோய்

திண்டுக்கல், டிச.27- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை பகுதியில் கன்றுகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதனால், விவ சாயிகள் வேதனையடைந்துள்ளனர். அம்மை நோய் தாக்குதலால் பசு கன்றுகள் உடல் சோர்ந்து காணப்படுகிறது. 10-க்கும்  மேற்பட்ட கன்றுகளுக்கு பாதிப்பு உள்ள தாக கால்நடை மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். குஜிலியம்பாறை ஒன்றியப் பகுதியில் இந்த ஆண்டு போதுமான மழை பெய்ய வில்லை. இதனால் பூமி வறண்டு உள்ளது.  ஆனால் தற்போது பனிக்காலம் என்பதால்  குளிர்ச்சி நிலவுகிறது. மாடுகளுக்கு உள்ள எதிர்ப்பு சக்தி அதன் கன்றுக்குட்டிகளுக்கு போதிய எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால் கன்றுக்குட்டிகளை எளிதில் அம்மை நோய் தாக்குகிறது. குஜிலியம்பாறை வட்டத்தில் ஆலம்பாடி ஊராட்சி மற்றும் கருங்கல் ஊராட்சி பகுதிகளில் கொஞ்சம் நோய் தாக்குதல் தீவிரமாக உள்ளது. ஆலம்பாடி ஊராட்சி கொல்பட்டியில் குழந்தைவேலு என்ற விவசாயியின் 2 வய துடைய சிந்து கலப்பின கன்றுக்குட்டிக்கு அம்மை நோய் வந்துள்ளது. இதே போல் கருங்கல் ஊராட்சி ஆணைபட்டியில் உள்ள  விவசாயி ஏ.ராஜரத்தினம் வீட்டில் உள்ள 4 மாத நாட்டு மாட்டு கன்றுக்குட்டிக்கும் அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வைரஸ் தொற்று பெரியம்மை என்ற  அம்மை நோய் கன்றுக்குட்டியின் கழுத்தில்  ஒரு கிலோ அளவிற்கு கட்டியை ஏற்படுத்து கிறது. இந்த கட்டி புண்ணாக மாற வாய்ப்  புள்ளது. கொசுக்கள், ஈக்கள், காக்கைகள் போன்றவற்றால் இந்த நோய் பரவுகிறது. குஜிலியம்பாறை பகுதியில் சுமார் 10 கன் றுக்குட்டிகளுக்கு இந்த அம்மை நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  நோய் பாதித்த கன்றுகளை தனிமைப் படுத்த வேண்டும். சுமார் 17 நாட்கள் முதல்  37 நாட்கள் வரை இந்த நோய் பாதிப்பு இருக்கும்.  இது தொடர்பாக அரசு கால்நடை மருத்துவர் கூறும் போது, இந்த ஆண்டு  அம்மை நோய் தடுப்பூசி போடப்பட்டுள் ளது. ஆனால் தடுப்பூசி போடப்பட்டதற்கு பிறகு பிறந்த கன்று குட்டிகளுக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது’’ என் றார்.  மேலும் இந்த நோய்க்கு மருந்துகள் இல்லை. எனவே விவசாயிகள் நாட்டு மருந்துகளையே பயன்படுத்துகிறார்கள். வேம்பு, மஞ்சள், பூண்டு, இஞ்சி எண்ணெய் என நோய் பாதித்த கன்றுக்குட்டிகளின் கட்டி கள் மீது அரைத்து தடவுகிறார்கள்.   இந்த ஆண்டு கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி போடப்படவில்லை என்று  விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் அம்மை தடுப்பூசி போட்டதாக கூறுகின்றனர்.  இதே போல காணை நோய்க்கு 60  விழுக்காடு மாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 40 விழுக்காடு போட வில்லை. உடனடியாக கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இந்த  பகுதியில் பரவும் அம்மை நோயை கட்டுப்  படுத்த வேண்டும் என்று இப்பகுதி விவசாயி கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

10 வயது மகளைக் கொன்ற தந்தைக்கு  ஆயுள்-28 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கொச்சி, டிச.27- கொலைக்கு ஆயுள் தண்டனையும், கொலையைத் தவிர மற்ற குற்றங்களுக்கு 28 ஆண்டுகள் சிறை தண்ட னையும் விதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.  2021 மார்ச் 21 அன்று, வைகாவை மது அருந்த வைத்து கழுத்தை நெரித்து ஆற்றில் வீசினார். காயம்குளத்தில் இருந்து மகள் வைகாவுடன் மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட சனுமோகன் முதலில் கங்கரபாடியில் உள்ள தனது பிளாட்டை அடைந்தார்.வழியில் வாங்கிய கோகோ கோலாவில்  மதுவை கலந்துவிட்டு பயணம் தொடங்கியது. குடிபோதையில் இருந்த பத்து வயது சிறுமி யை அந்த குடியிருப்பின் விசிட்டிங் அறையில் உட்கார வைத்து, கழுத்தை நெரித்து மூச்சுத் திணறடித்துள்ளார். மயக்கமடைந்த குழந்தையை, படுக்கை விரிப்பில் சுற்றி, காரின் பின் இருக்கையில் இருந்து, இரவு, 10.30 மணியள வில், முட்டாறு ஆற்றில் வீசினர். மரணம் உறுதியான பிறகு, அவர் தமிழ்நாட்டின் கோவைக்கு சென்றார். குழந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட நகை களை விற்று கிடைக்கும் பணத்தில் வெளிநாடு செல்வதே நோக்கமாக இருந்தது. பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தலை மறைவாக இருந்த சனுமோகன் ஒரு மாதத்திற்கு பிறகு பிடிபட்டார். ஒரு வருடமாக நடந்த விசாரணையில் 78 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஊதாரித்தனத்தால் ஏற்பட்ட கடனில் இருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்த சனுமோகன், மற்றவர்களால் தனது மகள்  புறக்கணிக்கப்படுவார் என்ற கவலையால் கொன்று விட்டார் என கூறப்படுகிறது.

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த  காரில் திடீர் தீ விபத்து

தஞ்சாவூர், டிச.28 -  பட்டுக்கோட்டையில், முக்கிய வணிக வளாகங்கள் நிறைந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக் குட்பட்ட பகுதியான, அறந் தாங்கி சாலை பகுதியில் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. அந்தப் பகுதியில், வியாழக்கிழமை சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகா கார் ஒன்று திடீ ரென புகை விட்டு எரியத் தொடங்கியது.  இதனால் பதற்றமடைந்த அருகில் இருந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் பட்டுக்கோட்டை தீய ணைப்பு துறையினர் உடனடி யாக சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ரசாயனப் புகையை அடித்தும், தீ பரவாமல் தடுத்தனர்.  இதனால் நகரின் முக்கிய பகுதியில் பெரும் அசம்பா விதம் தடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கார் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வந்து பார்த்த போது காரின், பேட்டரியில் மின்கசிவு காரணமாக தீ பற்றியது தெரியவந்தது.