திருச்சிராப்பள்ளி, ஏப்.25-
கல்வியே சமத்து வத்தின் ஆயுதம். இரு ளர், நரிக்குறவர் சமு தாய மாணவர்களும் படிக்க வேண்டும் என தமிழக அரசு ஆசைப் படுகிறது என்றார் பள் ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சிராப்பள்ளி என்.ஆர்.ஐ. ஏ.எஸ்.அகாதெமி சார்பில் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-4 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் விழா மற் றும் போட்டித் தேர்வு தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு என்.ஆர்.ஐ. ஏ.எஸ்.அகா தெமி இயக்குநர் ஆர். விஜயாலயன் தலை மை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு மாநில அளவில் சாதனைபடைத்த ஜி.அருணா குமாரி, எஸ்.மீரா, பி.பெருமாள், பி.பிரகாஷ், அகானா ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கி னார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-
கடந்தாண்டு பள்ளிக் கல்வித் துறையில் 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலப் பாடங்களை குழந்தைகள் படிக்கவும், கணித அடிப்படையை அறிந்து கொள்ளவும் எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டு ரூ.67 கோடி நிதி ஒதுக் கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை விரிவுபடுத் தப்பட்டு ரூ. 110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. அறிவியல் பூர்வமான அறிவை ஆரம் பப் பள்ளிகளிலேயே விதைக்க வேண்டும்.
ஒரு சிலர் முதல் முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். சிலருக்கு இரண்டு மூன்று முயற்சிகளுக்கு பின்னர் வெற்றி கிடைக்கி றது. வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வரலாற்றில் இடம் உண்டு. வேடிக்கை பார்ப்பவருக்கும், விமர்சனம் செய்பவருக்கும் வரலாற்றில் இடம் கிடைக்காது.
வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த அச்சத்தை தவிர்க்க வேண்டும். ஒன்றிய அரசு 2030-ஆம் ஆண்டில் உயர்கல்வியில் 50 சதவீதத்தை எட்டிப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை தமிழ் நாடு எப்போதோ எட்டிப் பிடித்துவிட்டது.
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடை யாளம் அல்ல பெருமையின் அடையாளம். கல்வியே சமத்துவத்தின் ஆயுதம். இரு ளர், நரிக்குறவர் சமுதாய மாணவர்களும் படிக்க வேண்டும் என இந்த அரசு ஆசைப் படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாதெமி இயக்குநர் விஜயா லயன் பேசும்போது, “கரண்ட் ஈவன்ட்” தெரிந்த அமைச்சராக இருக்கிறார் என என்னைக் குறிப்பிட்டார். “கரப்ட் ஈவன்ட்டில்” என்னுடைய பெயர் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கி றேன் என்றார்.