தஞ்சாவூர், ஜூன் 18 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே குளத்தில் மண் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப் பட்டு, ஓட்டுநர் கைது செய் யப்பட்டார்.
பேராவூரணி அருகே உள்ள வாத்தலைக்காடு நொச்சிக்குளத்தில் குளத்தை வெட்டி மண் அள்ளுவதாக காவல் துறைக்கு கிடைத்த ரக சிய தகவலின் பேரில், ஆய்வாளர் காவேரி சங்கர், உதவி ஆய்வாளர் வாகீஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சோத னைக்குச் சென்றபோது, இரவு நேரத்தில் வாத்த லைக்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே குளத் தில் மண் அள்ளி ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்தனர். குளத்தில் மண் அள்ள மாலை 6 மணிவரை மட்டுமே அனு மதியும், டிப்பரில் மட்டுமே அள்ள வேண்டும் என்ற விதிகளுக்கு மாறாக இரவு நேரத்தில் லாரி யில் அள்ளி வந்ததால் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநர் ஹரிஹரனை (28) கைது செய்தனர்.