மன்னார்குடி, டிச.14 - திருவாரூர் மின் பகிர்மான வட்டம், மன்னார்குடி கோட்டம் சார்பில் மின் சிக்கன பிரச்சாரம் மன்னார் குடியில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மேற் பார்வை பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மன்னார்குடி கோட்ட செயற்பொறியாளர் பி.மணி மாறன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி நகர மின்வாரிய தேசிய பயிற்சியாளர் முனைவர் சா.சம்பத், மின் சிக்கன வழிமுறைகள் பற்றி பேசினார். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், மின்வாரிய செயற்பொறியா ளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் பல பகுதி களுக்குச் சென்றது. இதில், மின் சிக்கன வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.