districts

img

ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல் திருச்சியில் துரை.வைகோ பேட்டி

திருச்சிராப்பள்ளி, மார்ச் 21- இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலானது என்றார் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை.வைகோ. திருச்சி தொகுதியில் திமுக கூட்ட ணியில் மதிமுக வேட்பாளராக துரை. வைகோ போட்டியிடுகிறார். இதை யொட்டி வியாழனன்று திருச்சி வந்த  துரை.வைகோ, கூட்டணி கட்சி நிர்வாகி களை சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரச்சா ரத்தை துவங்கினார்.  தொடர்ந்து மதிமுக மாவட்ட  அலுவலகத்தில் நடந்த செய்தியா ளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:  இந்த தேர்தல், ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்குமான தேர்தல்; அடித்தட்டு  மக்களுக்கு தேவையான திட்டங்களை  வழங்கும் அரசு இயக்கங்களுக்கும் மத வாதத்தால் மக்களை பிளவுபடுத்தும் அரசியல் இயக்கங்களுக்குமான தேர்தல். தமிழக அரசு ஆட்சிக்கு வந்த 3  ஆண்டுகளில் தேர்தல் பரப்புரையில் கூறிய வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட 75  சதவீதத்தை தமிழக முதல்வர் நிறை வேற்றி உள்ளார்.  சென்னையில் புயல், மழை வெள்ளத் தால் கிட்டத்தட்ட 37 ஆயிரம் கோடி தனி நபர் மற்றும் அரசு சொத்துகள் நாசமா கின. இதை ஒன்றிய அரசின் குழு பார்வையிட்ட நிலையில், சில வாரங்களில்  நிதி வழங்குவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஆனால்  இதுவரை ஒருபைசா கூட கொடுக்க வில்லை. ஒன்றிய அரசு பாஜக இல்லாத  மாநிலங்களில், ஆளுநர் மூலமாக இடையூறு செய்கின்றனர்.  உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு  வெறும் 2 சதவீதம்தான் குறைத்துள் ளது. இதனால் அத்தியாவசியப் பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டு வரப்படும், மொழிகளுக்கான நிதிப் பகிர்வில் சம நிதி வழங்கப்படும். நீட்  தேர்வு விலக்கப்படும். புதிய கல்விக்  கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும். ஒன்றிய அரசின் தேர்வுகள் மாநில மொழிகளிலேயே நடத்தப்படும் உள்ளிட்டவை திமுக தேர்தல் அறிக் கையில் இடம்பெற்றுள்ளன.  செயல்பாட்டுக்கு வராத விமான நிலையம்... பாஜக அரசு திருச்சியில் திறந்து  வைத்த புதிய விமான நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.  திருச்சியில் உள்ள 6 சட்டமன்றத் தொகு திக்கும் தேவையான உள்கட்டமைப்பு கள் கொண்டு வரப்படும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு என்னால் முடிந்த முயற்சிகளை செய் வேன். பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மீண்டும் லாப கரமான நிலைக்கு கொண்டுவர முயற் சிப்பேன். பொன்மலை ரயில்வே பணி மனையில் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள தமிழக அரசின் மூலம், ஒன்றிய அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்வேன். தொகுதிக்கு செல்லும் போது, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு அந்தந்த அமைச்சர்கள் மூலம்  நிறைவேற்றுவேன். இந்தியா கூட்டணி  பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெறுவோம். ஆளுநர் இந்திய  அரசியலமைப்பு சட்டப்படி நடப்ப தில்லை. ஆளுநர் ஆர்எஸ்எஸ்-இன் கொள்கை பரப்புச் செயலாளராக உள்ளார்” என்றார்.