விலைவாசி உயர்வால் கால்நடை தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் எஸ்.ரவி தலைமையில் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். துளசி நாராயணன், மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எம்.சங்கர் உள்ளிட்ட பலர் பேசினர்.