தஞ்சாவூர், ஜன.24 - நிகழாண்டு தஞ்சாவூர் மாவட்டத் தில் மழை குறைந்ததால், இறுதிக்கட்டத் தில் உள்ள தாளடி நெற்பயிரை காப்பாற் றவும், எதிர்கால குடிநீர் தேவைக்காக வும் மேட்டூர் அணையை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவ சாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புதன்கிழமை மாவட்ட அளவி லான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் தெ.தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதி காரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதா வது: செங்கிப்பட்டி பகுதியில் உய்யக் கொண்டான் நீட்டிப்பு கால்வாய், புதிய கட்டளை வாய்க்கால் பாசன பகுதி களில் முற்றிலும் தண்ணீர் இல்லாத தால், பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. அந்த பாசனப் பகுதி விவசா யிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மகசூல் பாதிக்கப்பட்ட பகுதி களை துறை சார்ந்த அதிகாரிகள் கணக் கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நிக ழாண்டு மழை குறைவாக பெய்துள்ள தால், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை. இதனால் வரும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி பயிருக்கு இன்னும் இரண்டு முறை தண்ணீர் தேவைப்படுவதால், உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும். தற்போது சம்பா அறுவடை தொடங் கியுள்ளது. ஆனால் சம்பா கொள்முதல் தொடர்பாக உயரதிகாரிகள் இதுவரை கூட்டத்தை கூட்டவில்லை. உடனடி யாக அந்த கூட்டத்தை கூட்டி கொள் முதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்க ளில் பெருமளவு நடக்கும் எடை மோசடியை தடுக்க வேண்டும்.
தரமான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்க!
ல்லணைக் கால்வாய் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை இந்தாண்டு தரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகள் தொய் வின்றி நடைபெறுவதற்கான நடவடிக் கையை மாவட்ட நிர்வாகம் தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை அருகே உள்ள தென்னை வணிக வளாகத்துக்கு கொள் முதல் செய்யப்பட்டுள்ள இயந்திரங்கள் தரமில்லாத வகையில் உள்ளன. சுமார் ரூ.8 கோடி வரை செலவு செய்யப்பட்டு உள்ள இந்த வளாகத்தை, இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. நீர்நிலை புறம்போக்கு பகுதியில் அமைக்கப்பட்ட இந்த தென்னை வணிக வளாகம் செயல்படாமல் இருந் தால், உடனடியாக அந்த இடத்தை நீர்வள ஆதாரத் துறையிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தமிழக முதல்வர் அறிவித்த 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருமளவு விவசாயிகளுக்கு இணைப் புகள் வழங்கப்படவில்லை. இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். மாவட்டத்தில் கோடை நெல் சாகு படிக்கு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்யலாம் என தமிழக அரசால் விளம் பரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் அதற்கான பயிர்க் காப்பீடு பிரிமியத்தை பெற மறுப்பு தெரி விக்கின்றனர். இதற்கான காரணத்தை வேளாண்மைத் துறையினர் விளக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் விவசாயிகளின் குறை களுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவ்வப்போது பதில் அளித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு
இக்குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: பூதலூர் தாலுகா டெல்டாவின் தலைப்பு பகுதியாகும். இந்த ஆண்டு தண்ணீர் கிடைக் காததால், பெரும்பகுதி நிலங்களில் விவசாயம் செய்யப்படவில்லை. செங்கிப்பட்டி பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலிருந்து, ஒரு சொட்டு தண்ணீர்கூட தஞ்சை மாவட்ட பகுதி விவசாயத்திற்கு வழங்கப்படவில்லை. தற்போது இந்தப் பகுதியில் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வரு கிறது. இதனால் விவசாயிகள் சற்றே ஆறு தல் அடைந்துள்ளனர். ஆனால், இதில் செல்லப்பன் பேட்டை, மருதக்குடி, அய்யா சாமிப்பட்டி, செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி வடக்கு, பாளையப்பட்டி தெற்கு, புதுக்குடி தெற்கு ஆகிய கிராமங்கள் பயிர் காப்பீட்டு பலன்களில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுள்ளன. தண்ணீரே வழங்காமல், விவசாயமும் நடைபெறாமல், மிகவும் மன உளைச்சலோடு இருக்கும் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி யில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு வாழ்வாதா ரத்தையே இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் தலை மையில், நூற்றுக்கணக்கான விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து, ஆட்சியர் அலுவலகம் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.