districts

போக்குவரத்துக் காவலர் இல்லாததால் கும்பகோணம் சாலையில் தொடரும் நெரிசல்

பாபநாசம், ஜூன் 13-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம்- தஞ்சாவூர்  பிரதான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகும்.  குறிப்பாக பாபநாசம், ராஜகிரி, அய்யம் பேட்டையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்  குள்ளாகின்றனர். இந்தச் சாலையில் பாபநாசம்-அய் யம்பேட்டை இடையே சாலையோர ஆக்கிரமிப்புகள் அதி கம் உள்ளது.  

   இந்தச் சாலை கும்பகோணம் மகாமகத்திற்கு பின்  தற்போது தான் போடப் படுகிறது. சாலையோர ஆக்கிர மிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும். போக்கு வரத்து நெரிசலை சீரமைக்க பாபநாசத்தில் போக்கு வரத்துக் காவலர் பணியில் இருந்தார். தற்போது காவலர் இல்லை. போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்பட்ட காவலர்  நியமிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.