கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல மேகமலை வனத் துறையினர் தற்காலிக தடை விதித்திருந்தனர். தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து விடுமுறை தினமான ஞாயிறன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர்.