கும்பகோணம், ஜூன் 1-
ஊர் உலகம் தூங்கினாலும் ஓய்வின்றி மக்களுக்காக உழைத்து வரும் ஓட்டுநர் களின் சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி ஓட்டுநர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் வியாழனன்று தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மே ளனம் சார்பில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் சிஐடியு செங்கொடியை ஏற்றி வைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது. செங்கொடியை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோ பாலன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன மாநிலப் பொருளாளர் பார்த்த சாரதி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சாமிநாதன், கும்பகோணம் ஆட்டோ ஓட்டுநர் சங்க நகரச் செயலாளர் கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட ஆட்டோ சங்க பொறுப்பாளர் எல்.ஜி.மனோகரன் உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளர்கள், ஓட்டுநர் கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.